ETV Bharat / state

தற்கொலை முயற்சி - குழந்தைகள் உயிரிழப்பு

author img

By

Published : Jul 25, 2021, 7:41 PM IST

Updated : Jul 25, 2021, 9:37 PM IST

திம்மாபுரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்ட நிலையில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தற்கொலை முயற்சி

விருதுநகர்: ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவருடைய முதல் மனைவி தேன்மொழி இறந்துவிட்டதால், இரண்டாவதாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணை பூங்காவனம் திருமணம் செய்துகொண்டார்.

அடிக்கடி சண்டை

முதல் மனைவி தேன்மொழிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி பிரவீனாவிற்கு ஹர்ஷீகா (4), பூமிகா (11 மாதம்) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரவீனாவிற்கும் பூங்காவனத்தின் முதல் மனைவியின் குழந்தைகளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

இதனால் பூங்காவனத்திற்கும் பிரவீனாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூலை. 25) பிரவீனா தனது இரண்டு குழந்தைகளுடன் திம்மாபுரம் கிராமத்தில் சாலையோரம் உள்ள பெரிய கிணற்றில் தற்கொலைக்கு முயன்றார்.

குழந்தைகள் உயிரிழப்பு; தாய் மீட்பு

தற்கொலை முயற்சி

அவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காரியாபட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரவீனாவை மீட்டு சிகிச்சைக்காக முக்குளம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரவீனாவின் இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

காவல் துறையினர் விசாரணை

தீயணைப்பு துறையினர் உதவியுடன் உயிரிழந்த குழந்தைகளின் உடலை மீட்டு முக்குளம் காவல் துறையினர் உடற்கூராய்விற்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விவசாயி தற்கொலை மிரட்டல்

Last Updated :Jul 25, 2021, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.